Wednesday, May 7, 2008

மூன்று கிறுக்கல்கள்

குழந்தைகள்

நான் பெரிதா?
நீ பெரிதா?
பெற்றோரின் போட்டியில்
தோற்றுப்போயினர்
அப்பாவிக் குழந்தைகள்.




மரணம்

மனிதன் எழுதிய கவிதைக்கு
இறைவன் வைக்கின்ற
முற்றுப்புள்ளி





மனிதநேயம்

நம்மவர் தரப்பில்
நாற்பது பேர் காயம்
எதிரிகள் தரப்பில்
எழுபது பேர் மரணம்
இரண்டு பக்கமும் சேராமல்
அனாதைப்பிணமாய்
மனிதநேயம்

No comments: