Monday, September 8, 2008

நீ எனக்கு உயிரம்மா……

நெஞ்சமே ஆலயம்
நினைவுகள் சுகந்தம்
உந்தன் உருவமே தெய்வம்
என்று
சொன்னவை பொய்யாய் போச்சு
சோகமே சொத்தாய் ஆச்சு.
நாத்திகம் வளர்ந்ததாலே
ஆலயம் தூர்ந்து போச்சு.

வாழ்க்கையை தொடங்உம் நாளில்
வெறுமையே என்னை கொல்ல
வெறுமையை கொல்ல நானோர்
உருவினை உருவம் செய்தேன்.
கோட்டுரு கடந்த வடிவை
எந்தன் கொஞ்சிடும் அழகை
கவித்துவம் கொண்ட பெண்ணாய்
கனவினுள் செதுக்கி வைத்தேன்.

கல்லூரி நாளில் உன்னை
கண்ட நாள் முதலாய் எந்தன்
உள்ளமே என்னில் இல்லை.
முழுமையாய் கொண்டாய்
என்னை.

எதிலுமே ஒழுங்கு இல்லை.
வாழ்க்கையில் ரசனை இல்லை என்று
இருந்தவன் அன்று உனால்
புதியனாய் உதயம் ஆனேன்.
கருநிற அழகே எந்தன் காவிய கருவே
கண்ணனின் குழலே
எந்தன்
உயிரே, உருவே, நினைவே அன்பே… அன்பே

கஸ்தூரி மான்குட்டி என்று
நீ
பாடிய நாளில் அன்று
மான்குட்டி போலே எந்தன்
மனமுமே துள்ளியதம்மா…
மான்குட்டி கேட்டு நின்ற
சீதை என் வாழ்க்கை என்றால்.
ராகவன் நானே கண்ணே.

மான்குட்டி மறைந்து போச்சு
சீதையும் திருடு போச்சு.
ராகவன் மட்டும் இங்கே
எனக்கு
லக்குவன் கூட இல்லை

7 comments:

Anonymous said...

Oh Really,
I were not aware of that during school days!
Guru

அருண்மொழிவர்மன் said...

நான் மட்டுமா....

ம்ம்ம்ம்... அது ஒரு காலம்..

Anonymous said...

u dont have lakuvan? u hav

நட்புடன் ஜமால் said...

nice,

y don't u give more writings

தமிழ் மதுரம் said...

மான்குட்டி மறைந்து போச்சு
சீதையும் திருடு போச்சு.
ராகவன் மட்டும் இங்கே
எனக்கு
லக்குவன் கூட இல்லை //

சோகத்திலுன் சுகம் தரும் கவிதை... தொடருங்கள் நண்பரே....!

butterfly Surya said...

நல்லாயிருக்கு

வாழ்த்துக்கள்

தேவன் மாயம் said...

காலைவணக்கம்!
கவித்தேநீர் அருந்த
என் வலை
வருக.
அன்புடன்,
தேவா..